வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்ற பெண் வழக்கறிஞர், இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றுள்ளார்.
சாதிய அமைப்புக்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல, சாதி மறுப்பு கொள்கை உள்ளவர்களுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற அடையாளம் வேண்டும். இதற்கு ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து முயற்சித்தேன். கடந்த 2017-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை விண்ணப்பமாக வைத்து வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு சான்றிதழ் அளித்து உதவிய அரசு அதிகாரிகளுக்கு நன்றி என சிநேகா தெரிவித்தார்.
சாதிய அமைப்புக்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல, சாதி மறுப்பு கொள்கை உள்ளவர்களுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற அடையாளம் வேண்டும். இதற்கு ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து முயற்சித்தேன். கடந்த 2017-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை விண்ணப்பமாக வைத்து வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு சான்றிதழ் அளித்து உதவிய அரசு அதிகாரிகளுக்கு நன்றி என சிநேகா தெரிவித்தார்.